10 கிலோ கஞ்சாவுடன், பொலிஸ் அதிகாரி கைது
கஞ்சா போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவரை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு 10 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு 10 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முற்பட்ட போது அநுராதபுரம் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் சுற்றிவளைப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment