புத்தளத்தில் உள்ள அனைத்து புடவைக் கடை உரிமையாளர்களுக்கும் MOH விடுக்கும் செய்தி
புத்தளத்தில் உள்ள அனைத்து புடவைக் கடை உரிமையாளர்களுக்கு புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ( MOH) விடுக்கும் செய்தி.
கடைக்கு வரும் மக்களுக்கு கை கழுவுவதற்கு ஏற்பாடு செய்து வைக்க வேண்டும்.
நாள் ஒன்றுக்கு கடையின் உள் பகுதியை Tiles, Class என்பவற்றை தொற்று நீக்கி திரவம் கலந்த நீர் தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.
காசாளர் உட்பட கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு முறை கை கழுவ வேண்டும்.
கடைக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை பேணுவதுடன் முக மூடி அணிந்திருப்பது கட்டாயமாகும். ௯ட்டம் ௯ட்டமாக ஒன்று சேர்த்து வைப்பதனை தடுக்க வேண்டும்.
ஆடைகளை கொள்வனவு செய்ய வரும் மக்கள் தாம் தெரிவு செய்யும் ஆடைகளை அணிந்து பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டாம்
புடவைக் கடைகளுக்கு AC போடுவது முற்றாக தவிர்க்க வேண்டும்
- ரஸீன் ரஸ்மின் -
Post a Comment