Header Ads



செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் சுமந்திரனின் உருவப் பொம்மை


விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப் பொம்மை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அண்மையில் இனம் தெரியாத நபர்களினால் வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வைக்கப்பட்டுள்ள உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு உள்ளது.”நான் ஒரு தமிழ் இன துரோகி” என்ற பதாகையை குறித்த உருவ பொம்மையில் தொங்க விடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துக்களைத் தெரிவித்திருந்த கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார்.

இதற்கு அவரது கட்சிக்குள்ளும் வெளியிலும் பல எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த உருவப் பொம்மையினை யாழ்ப்பாணம் பொலிஸார் சற்றுமுன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.

இதற்கு அவரது கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் பல எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. திரு சுமந்திரன் ஐயா அவர்கள் உண்மையான தமிழன் என்பதை இந்த நாடகம் தௌிவாகக் காட்டுகின்றது. இந்த நாடகத்தின் பின்னால் இருப்பவர்கள் தமிழர்களின் எதிரிகள் என்பதை தமிழ் சமூகம் சரியாக உணர்ந்து கொண்டால் தமிழர்களின் இருப்பை எதிர்காலத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

    ReplyDelete
  2. இந்தச் சம்பவம் பெரும்பான்மை தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படாது
    என எண்ணுகிறேன். மாறாக பெரும்பான்மைத் தமிழ் மக்கள் இச்செயற்பாட்டை அங்கீகரிப்பார்களாயின் கடந்த கால கசப்பான அனுபவங்களிருந்து அவர்கள் எந்தவித படிபினையையும் பெற்றுக்கொள்ள வில்லை என்பதாகும்.

    ReplyDelete

Powered by Blogger.