Header Ads



நீர்கொழும்பு சிறைச்சாலையில் குளிர்சாதனப் பெட்டி, நவீன மொத்தைகள் கண்டுபிடிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையின் L விடுதியில் மின்சார உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளை நடத்த கொழும்பு மெகசீன் சிறைச்சாலையின் அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜயசிறி தென்னகோன் கூறியுள்ளார்.

சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் நேற்று முன்தினம் நடத்திய திடீர் தேடுதலில் நீர்கொழும்பு சிறைச்சாலையின் L விடுதியில் இந்த மின்சார உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

இரண்டு கதவுகளை கொண்ட குளிர்சாதனப் பெட்டி, இரண்டு நவீன மொத்தைகள், மின்சார அடுப்பு மற்றும் இரண்டு மின்விசிறிகள் சிறைச்சாலையில் இருந்து கைப்பற்றப்பட்டன.

இந்த மின்சார உபகரணங்கள் சிறைச்சாலைக்குள் எப்படி வந்தன என்பது குறித்தும், சிறைச்சாலை அதிகாரிகள் இதற்கு உதவினார்களா என்பது தொடர்பாகவும் விசாரணைகளில் கண்டறியப்படவுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்த மூன்று சிறைச்சாலை அத்தியட்சகர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். எனினும் அவர்கள் விசாரணைகளை நடத்த விரும்பவில்லை எனவும் சிறைச்சாலை திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்தே விசாரணைகளை நடத்த கொழும்பு மெகசீன் சிறைச்சாலையின் அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.