5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க, அரசியல்வாதிகளை நீக்குங்கள் - தேர்தல் ஆணைக்குழு
5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகளில், பிரதேச மற்றும் கிராம அரசியல்வாதிகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடன் இந்த கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர், பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மகளிர், சிறுவர் விவகார, சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு இந்த கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment