கொரோனா தொற்றுக்குள்ளான 2 ஆவது கடற்படை வீரர் பூரண குணமடைந்தார்
கடந்த 23 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது கடற்படை வீரர் குணமடைந்துள்ளார்.
குறித்த கடற்படை வீரர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கடற்படை வீரருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நிலையில், 23 ஆம் திகதி பி.சி.ஆர் சோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 3 தடவைகள் பி.சி.ஆர் சோதனைகள் மூலம் அவர் பரிசோதிக்கப்பட்டார். அனைத்து சோதனை முடிவுகளும் குறித்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியதால் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
மேலும், முல்லேரியா வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய குறித்த கடற்படை வீரர் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்.
இந்த நபர் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
Post a Comment