Header Ads



நீண்ட இழுத்தடிப்புக்கு பிறகு ஜனாஸாவை, கையளிக்கிறது நீர்கொழும்பு வைத்தியசாலை


நீர்கொழும்பு - பெரியமுல்லையில் நேற்று வெள்ளிக்கிழமை, 3 ஆம் திகதி வபாத்தான ஹவ்ளா மொஹமத் பரீத் (து 72) அவர்களுடைய ஜனாஸாவை கையளிக்க நீர்கொழும்பு வைத்தியசாலை இணங்கியுள்ளது.

குறித்த ஜனாஸா மீது, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவற்றின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

தற்போது அந்த பரிசோதனை முடிவுகள் அச்சப்படும் வகையில் இல்லை என்றபோதும், பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டுமென வைத்தியசாலை வலியுறுத்தியுள்ளது.

அதன்பின்னர் உடல்  கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாஸாவை நீர்கொழும்பு - பெரியமுல்லை முஸ்லிம் மையவாடியில் இன்று 04-04-2020  நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.