இத்தாலியில் 25 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் தான் கொரோனாவால் உயிரிழப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment