அட்டளுகமயில் 20 பேர் வீடுகளுக்குத் திரும்பினர்
பண்டாரகம- அளுத்கம சர்வோதய மத்திய நிலைய கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 20 பேர் இன்று (13) அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனரென, களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அட்டளுகம- மாராவ பிரதேசத்தில் மார்ச் மாதம் 26ஆம் திகதி கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, குறித்த 20 பேரும் 28ஆம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், 16 நாள்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த இவர்கள், இன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
Post a Comment