Header Ads



அட்டளுகமயில் 20 பேர் வீடுகளுக்குத் திரும்பினர்

பண்டாரகம- அளுத்கம சர்வோதய மத்திய நிலைய கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 20 பேர் இன்று (13) அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனரென, களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அட்டளுகம- மாராவ பிரதேசத்தில் மார்ச் மாதம் 26ஆம் திகதி கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, குறித்த 20 பேரும் 28ஆம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், 16 நாள்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த இவர்கள், இன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.