Header Ads



யாழ்ப்பாணத்தில் வழிபாட்டில், ஈடுபட்ட 18 பேர் கைது

யாழ்ப்பாணம் அத்தியடி பிள்ளையார் கோவிலில் சதுர்த்தி பூசை வழிபாட்டில் ஈடுபட்ட 18 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்றைய தினம் (26) சதுர்த்தி விரதம் பூசை வழிபாடு இன்று -26-மாலை இடம்பெற்றது.

பூசையில் கலந்து கொண்ட 18 பேரையும் யாழ்ப்பாணம் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மதவழிபாட்டு தளங்களில் ஒன்றுகூட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, குறித்த 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.