Header Ads



கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில், பெரும்பாலானோர் கம்பஹாவில்

இந்நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதுவரையில் இலங்கையில் 65 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களுள் 18 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 17 பேர், புத்தளம் மாவட்டத்தில் 12 பேர், குருணாகல் மற்றும் களுத்தறை மாவட்டங்களில் நால்வர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 3 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். 

மேலும் காலி, கோகலை, மாத்தறை, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற ரீதியில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர்கள் அனைவரும் தற்போது ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள 14 வைத்தியசாலைகளில் 218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments

Powered by Blogger.