தொலைபேசி சின்னத்தில் சஜித் அணி - இறுதி முடிவு வெளியானது
ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை முடிவின்றி முடிவடைந்ததை அடுத்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொலைபேசி சின்னத்தின்கீழ் போட்டியிடப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
தமது கட்சியின் கீழ் வரும் முன்னணி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமது இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை களைவதில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Good, chase away Ranil
ReplyDelete