Header Ads



“நவ லங்கா நிதாஹஸ் பக்ஷயா” என்ற பெயரில் புதிய கட்சி


முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமாகிய குமார வெல்கம தலைமையில் “நவ லங்கா நிதாஹஸ் பக்ஷயா” (புதிய லங்கா சுதந்திரக் கட்சி) என்ற பெயரில் புதிய கட்சியொன்று தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய கட்சியின் தொடக்க நிகழ்வானது கட்சியின் தலைவர் குமார வெல்கமவின் ஆதரவின் கோட்டை, ஸ்ரீஜவர்தனபுரவில் இடம்பெற்றது.

முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுடமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆசீர்வாதத்துடன் இந்த கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய குமார வெல்கம தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.