இலங்கையில் கொரோனா தொற்று - எண்ணிக்கை 56 ஆக உயர்வு
கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையத்தில் ஊடக சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமானது.
இதன் போது கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் இன்று (19) இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களுள் இருவர் முன்னாதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ள மாணிக்ககல் வியாபாரியின் மனைவி மற்றும் மகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment