இந்த தந்தையின் வேதனை கொடியது, இவரின் கண்ணீர் வலியது, கண்கள் கலங்குகின்றன, அல்லாஹ் இவருக்கு அருள் புரிவானாக
இந்த தந்தையின் வேதனை கொடியது!
- இவரின் கண்ணீர் வலியது!
- கண்கள் கலங்குகின்றன!
அல்லாஹ் இவருக்கு அருள் புரிவானாக!
காவிகளின் வெறியாட்டத்திற்கு ஆளான அந்த சகோதரரின் பெயர் முகம்மது ஜூபைர்என்பதும், அவர் ஒரு சாதாரண கட்டுமானத் தொழிலாளி என்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை, தொழுகைக் காக வெளியே சென்ற அவர், குழந்தைகளுக்காக இனிப்புப் பண்டங்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். அப்போதுதான் தலையில் வைத்திருந்த குல்லாவைஅடையாளம் கண்டு, திடீரென அவரைசூழ்ந்துகொண்ட சங்-பரிவாரங்கள், கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளன.
இதில், தலை, கை, கால்களில் காயமடைந்து மூர்ச்சையான நிலையில் கிடந்தஜூபேரை, அந்த வழியாகச் சென்ற சிலர்மீட்டு, தில்லி ஜிடிபி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது, சிகிச்சைக் குப் பின்னர் அவர் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருக்கிறார். மனைவிமற்றும் குழந்தைகளை பாதுகாப்பு கருதிஉத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமையை, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் முகம்மது ஜூபைர் கண்ணீருடன் விவரித்துள்ளார்.“அவர்கள் என்னை பயங்கரமாகத் தாக்கினார்கள். நான் வேண்டாம் என்றுகெஞ்சிய பின்னர்தான் அவர்கள் என்னைமேலும் கொடூரமாக தாக்கினார்கள்.
அவர்களில் சிலர், கபில் மிஸ்ராவின் (தில்லி பாஜக தலைவர்) பெயரை சொன்னார்கள். எனக்கு இதற்குமேல் எதுவும் ஞாபகம் இல்லை” என்று கூறியிருக்கும் ஜூபைர், “நான் தாக்கப்பட்டுக்கிடந்த அந்தப் புகைப்படத்தை என்னால் பார்க்க முடியவில்லை; பயத்தில் இப்போதும் கால்கள் நடுங்குகின்றன; நிச்சயமாக எனது மனைவி மற்றும் குழந்தைகள் இந்த புகைப்படத்தைப் பார்த்துவிடக் கூடாது” என்றும் கண்ணீர் விட்டுள்ளார்
Syed ibrahim.m.s
Post a Comment