Header Ads



இந்தியாவின் 20 கோடி இஸ்லாமியர்கள் வன்முறைக்கு இலக்காகி உள்ளனர், இந்துக்கள் மீது கை வைக்கக் கூடாது – இம்ரான்கான் எச்சரிக்கை

இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஏற்பட்டுள்ள போராட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த கலவரம் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ”வெறுப்பு அடிப்படையிலான இனவாத சித்தாந்தங்கள் தலைதூக்கினால் ரத்தம்தான் சிந்தும். இந்தியாவின் 20 கோடி இஸ்லாமியர்கள் வன்முறைக்கு இலக்காகி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் உள்ள சூழலை காரணமாக கொண்டு பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரான இந்தி, சீக்கிய மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

3 comments:

  1. I don´t know imarran khan good or bad leader but i preciat his speech!

    ReplyDelete
  2. Imran-khan is Muslim leader to Pakistan, not an Islamic ruler.
    we should know the difference.
    if a leader/king/president beheaded two or 3 peoples won't make him a "Kaleefa"

    ReplyDelete
  3. நபிகளாரின் முன்மாதிகள் எம்மிடமுள்ளது என்பதை இவ் அறிக்கையில் காணலாம். நபித்துவத்திலிருந்து சுமார் 12வருடங்கள் துரத்தித் துரத்தி சொல்லொண்ணா துன்பங்களை காபிர்கள் செய்தனர். நபிகளார் மதினா செல்லும் வரை பொறுமை காத்தார்கள்.
    ஆனால்ல் காபிர்கள் மதினாவிலும் நுழைய முற்பட்ட போது தான் திரும்பித் தாக்க ஆரம்பித்தார்கள் .10 வருடங்களுக்குள் பாரிய சாம்ராஜ்ஜியத்தின் தளபதியானார்கள்.
    அந்தப் பாரம்பரியத்தை சுமந்து வந்த முஸ்லிம்கள் உலகிற்கு அரசாட்சி,வீரம்,அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம், பொருளாதாரம், கணிதம், பண்பாடு என அனைத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள். இருப்பினும் பொறுமையாளர்களோடு இறைவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் என்பதும் இங்கு உணரப்படுகிறது.
    முட்டாள் அஜன் அறிவு பற்றி எழுதுகிறார். இதிகாசம்,புனைகதைகளை தவிர்த்து உண்மையான வரலாறுகளைப் பார்த்தால் புரியும் அறிவு வளர்ச்சி யாரிடம் இருந்தது என்பது.

    ReplyDelete

Powered by Blogger.