பாடசாலை சீருடை வவுச்சர் 735 ரூபாவாக அதிகரிப்பு
பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் மூலமாக வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இத்தொகை 525 ரூபாவில் இருந்து 735 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த அரசாங்க காலப்பகுதியில் வழங்கப்பட்ட வவுச்சர்களின் பின் புறத்தில் இடம்பெற்றிருந்த புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளன.
அரசியல்வாதிகளின் புகைப்படங்களுக்கு பதிலாக மாணவர்களின் புகைப்படங்களை உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Post a Comment