Header Ads



குவைத்தில் துன்புறுத்தல்களுக்குள்ளான 36 இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்

(எம்.மனோசித்ரா)

குவைத்துக்கு வீட்டு பணிப்பெண்களாகச் சென்று வீட்டு உரிமையாளர்களால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட 36 இலங்கை பெண்கள் இன்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ளனர். 

வீட்டு உரிமையாளர்களால் வெவ்வேறு துன்புறுத்தல்களுக்கும் உள்ளான குறித்த இலங்கை பெண்கள் அனைவரும் அந்நாட்டிலுள்ள பாதுகாப்பு நிலையங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களாவர். 

தாம் பணிபுரிந்த வீட்டு உரிமையாளர்களின் துன்புறுத்தல்களை பொறுத்துக் கொள்ள முடியாத பட்சத்திலேயே இவர்கள் அனைவரும் குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதன் பின்னர் அவர்கள் பாதுகாப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்ப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டலுவல்கள், தொழில் துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலையீட்டில் இவர்கள் அனைவரும் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.