பாதாளக் குழுவினர் பற்றி 071 3680001 என்ற இலக்கத்திற்கு முறையிடுங்கள் - பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு
கொழும்பு, வெல்லம்பிட்டி மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் இடம்பெறும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாளக் குழுவினரைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட சோதனைப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தின் வடக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் இந்தப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், வெல்லம்பிட்டியிலிருந்து அவிசாவளை வரையிலான களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்களை அச்சுறுத்தி, அவர்களிடமுள்ள காணிகளை ஆகக் குறைந்த விலைகளுக்குக் கொள்வனவு செய்து, சட்டவிரோதமாக அதனை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் கப்பம் பெறுபவர்களை ஒடுக்குவதே, இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோத மற்றும் அனுமதியின்றி காணிகளை நிரப்புதல், கப்பம் பெறுதல் தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இது தொடர்பில்
071 3680001 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறையிட முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
Post a Comment