Header Ads



ராஜித்தவை காணவில்லை - தீவிர தேடுதலில் CID

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அது தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றின் உத்தரவும் உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. 

எழுத்து மூலம் சபாநாயகருக்கு இது தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ள நிலையிலேயே இன்று ராஜித்த சேனாரத்னவை தேடி பல இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்தவின் வீடு, அவர் மறைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மேலும் சில இடங்களையும் சோதனைக்குட்படுத்தியதாகவும் இதன்போது அவர் அவ் விடங்களில் இருக்கவில்லை எனவும் விசாரணைகளுக்கு பொறுப்பான  சி.ஐ.டி.யின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

1 comment:

  1. வாயைக் கொடுத்து சூத்தைப் புண்ணாக்கும் அமைச்சர் இவர்தான்.

    ReplyDelete

Powered by Blogger.