விமர்சனத்திற்குள்ளான ஓவியம் அழிக்கப்பட்டது
ஜயவர்தனபுர புறக்கோட்டை - தலவத்துகொட வீதியில் மதில் சுவர் ஒன்றில் வரையப்பட்டிருந்த எம்.சீ.சீ. உடன்படிக்கையை விமர்சிக்கும் ஓவியம் அழிக்கப்பட்டுள்ளது.
இவ் ஓவியத்தை அழிப்பதற்கான உத்தரவு யாரால் வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.
எம்.சீ.சீ. உடன்படிக்கைக்கு எதிராக தற்போதைய ஆளும் கட்சி மட்டுமல்லாது எதிர்க்கட்சியை சேர்ந்த சிலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் இந்த ஓவியம் அழிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓவியம் அமெரிக்காவின் எம்.சீ.சீ. உடன்படிக்கையை கடுமையாக விமர்சிக்கும் வகையில் சித்திரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
Post a Comment