Header Ads



பேஸ்புக் களியாட்டத்தில், பங்கேற்ற 100 பேர் கைது - தெஹிவளையில் அசிங்கம்

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்டத்தின் போது போதைப் பொருட்களுடன் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்றிரவு தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்டவர்களில் 83 ஆண்களும் 17 பெண்களும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

18 வயதுக்கும் 40 வயதுக்கும் உட்பட்ட அம்பலாங்கொட, களுத்துறை, குருநாகல் மற்றும் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களிடமிருந்து கேரள கஞ்சா 4 கிராம், மதுபானம் 38,500 மில்லி லீட்டர் மற்றும் மேலும் பல்வேறு வகை போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

No comments

Powered by Blogger.