Header Ads



மைத்திரியின் ஆலோசகர், சஜித்தின் பக்கம் தாவினார் - தமிழ் கட்சிகளின் நிபந்தனைகளை நிராகரிக்கிறார்

ஐந்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக, பேச்சு நடத்துவதற்கு, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தயாராக இல்லை என்று, அவரது பரப்புரைக் குழுவைச் சேர்ந்த ஷிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய இலங்கைக்குள், அதிகாரங்களைப் பகிர்வதற்கு தாம் ஆதரவளிப்பதாக, சஜித் பிரேமதாச தெளிவான கொள்கையை முன்வைத்துள்ளார். அதற்கு அப்பால் பேச்சுக்களை நடத்துவதற்கு எதுவும் இல்லை.

தமிழ்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள 13 நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

தமிழ் மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதாக நாங்கள் உணருகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.