Header Ads



சஜித் பிரேமதாசவால், கோத்தபாயவை தோற்கடிக்க முடியாது - ரில்வின் சில்வா

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

வெலிமடையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

கோத்தபாய பாரதூரமானவர், அவர் வந்தால், நாடு அழிந்து விடும் என்ற கதையை உருவாக்கினார்கள். கோத்தபாய சர்வாதிகாரி, அவரை தோற்கடிக்கக் கூடியவருக்கு வாக்களிப்போம் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.

சஜித் பிரேமதாசவால், கோத்தபாயவை தோற்கடிக்க முடியுமா?. அதனை அவரால் செய்ய முடியாது. இந்த இரண்டு தரப்பினரும் நண்பர்கள்.

2015ஆம் ஆண்டு மக்கள் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்த்தனர். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியினால், அவர்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாமல் போனது.

ரணிலுக்கோ சஜித்திற்கோ ஒரு திருடனை பிடிக்க முடியாமல் போனது. கோத்தபாயவின் சர்வாதிகாரத்தை சஜித்தால் தோற்கடிக்க முடியாது.

சஜித்தால் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியாது. நாட்டில் உருவாகும் சர்வாதிகாரம், ஜனநாயக விரோதம் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் அதனை தேசிய மக்கள் சக்தி கூட்டணியால் மட்டுமே செய்ய முடியும் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.