Header Ads



சிறுபான்மை கட்சிகளுடன் சஜித் பேச்சு நடத்தியதன்பின் UNP க்குள் நிலவும் நெருக்கடி தீர்க்கப்படும்

அமைச்சர் சஜித் பிரேமதாச சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். 

அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். 

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் சுவை மற்றும் அனுபவம் தொடர்பில் நன்கு அறிந்தவராவார் எனவும் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் ஒருபோதும் கட்சியின் சின்னத்தை மாற்றுவதற்கு இணங்க போவது இல்லை எனவும் அதனால் குறித்த இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.