Header Ads



மக்களே,, மண்சரிவு குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, நுவரெலியா,கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் கிரியெல்ல,கலவன,இரத்தினபுரி,ஹெஹலிய கொட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல மற்றும் தெஹியோவிட்ட  ஆகிய பகுதிகளில் பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை  மாவட்டத்தில் மத்துகம, புலத்சிங்கல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறும் ஆபத்தான இடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுத்தப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.