தென் கொரியா - பூசான் நகரில், இலங்கையர்களின் உழைப்பினால் உருவான பள்ளிவாசலில்
தென் கொரியாவின் தென்பகுதியான பூ சான் பகுதியில் Gimhea நகரில் அல் தக்வா பள்ளிவாசலில் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் இஸ்லாமிய ஒன்றுகூடல் நிகழ்வொன்று 13 .09. 2019 வெள்ளிக்கிழமை அசர் தொழுகை முதல் 14 .09. 2019 சனிக்கிழமை அசர் தொழுகை வரை இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக சம்சம் பவுண்டேஷன் தலைவர் யூசுப் முஃப்தி ஹனிபா அவர்கள் கலந்து கொண்டார்.
தென் கொரியாவின் அனைத்து பாகங்களிலும் வேலை செய்யக்கூடிய இலங்கை. இந்தியா நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டாவது தடவையாக நடைபெற்ற இந்த இஸ்லாமிய ஒன்றுகூடல் ஆனது அந்தப் பள்ளிவாசலின் உடைய 10 ஆண்டுகள் நிறைவு விழா மற்றும் பள்ளி வாசலுக்கு சொந்தமாக வாங்கப்பட்ட கட்டிடத்தின் உடைய திறப்புவிழா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
- Riyasath from korea -
Masha allah
ReplyDeleteBarakallahu fee hayathihi
Allah is great.?
ReplyDeleteMasha Allah
ReplyDelete