7 முஸ்லிம் அரசியல்வாதிகளை தற்கொலை, குண்டுதாரிகளாக்கி கிழக்கில் பதாதை
மட்டக்களப்பு - கிரானில் சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இணைத்துக் கட்டப்பட்டிருந்த பதாதை இன்று -30- நீக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்லுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரான் சுற்று வட்டத்திற்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இணைத்து நேற்றையதினம் பதாதை ஒன்று கட்டப்பட்டிருந்தது.
பல்வேறு தரப்பிலிருந்தும் குறித்த பதாதைக்கு எதிராக எழுந்த கண்டனங்களை தொடர்ந்து இன்று பதாதை அவ்விடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
குறித்த பதாதையில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களாக முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் சித்தரிக்கப்பட்டிருந்ததுடன், கிழக்கு தமிழனமே விழித்துக் கொள்,சஜித்தை ஜனாதிபதியாக்குவதன் மூலம் கிழக்கை முஸ்லிம்களிடம் தாரைவார்ப்பதா?, சஜித்தின் வெற்றி முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றி என எழுதப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது அந்த மட்டைகளப்பு இனவாத,வங்குரோத்து அரசியல் வாதி ஒருவர்,எதர்கெடுத்தாலும் நாலு பேரை வைத்துக்கொண்டு வீதியில் ஒப்பாரி வைக்கும் அந்த வி யின் வேலை.
ReplyDeleteWhen I read the above post it came to my mind a proverb I learned which is "A LEOPARD CAN'T/DOESN'T CHANGE IT'S SPOT". It is now I feel that indirect war is going on between two minority communities. It is good and expectation of the fox.
ReplyDelete200% உண்மை
ReplyDeleteHow about If Muslims will make a poster of all Tamil leaders who ever with other parties putting them LTTE dress code ? This is wrong. Do not do like this kind of approach to win the vote of people.
ReplyDeleteAjan 200% அல்ல 300% உறுதி.நீ ஒர் புலி பாசிச பயங்கரவாதி
ReplyDelete