ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமிக்காவிட்டால், 5 வருடங்கள் வீட்டிலிருப்பேன் - ஹரீன்
அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவில்லை என்றால் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கண்டி - போகம்பர பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாஸ அதிகாலை 4 மணியளவில் எழுந்திருந்து அனைவருக்கும் தொலைபேசியில் அழைக்கின்றார்.
அவ்வாறு செய்வதனை சிலர் தொல்லையாக நினைக்கின்றனர். எனினும் சஜித் போன்ற அரசியல்வாதி ஒருவர் ஜனாதிபதியாவதற்கு தகுதியான ஒருவராகும்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இம்முறை சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படவில்லை என்றால் தான் அரசியலில் இருந்து விலகி விடுவேன். எதிர்வரும் 5 வருடங்களும் வீட்டிலேயே இருப்பேன் என ஹரின் மேலும் தெரிவித்துள்ளார்.
பதுளை தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியிக்கு கிடைக்கக் கூடிய பெருமளவு வாக்கு வங்கியை ஹரின் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ada sei modalla idu UNP onda vapada katchi illa
ReplyDelete