முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி, வேட்பாளராக களமிறங்க வேண்டும்
எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் இம்முறை 50 சதவீத வாக்குகளைப்பெறப் போவதில்லை. சிறுபான்மை மக்களின் வாக்குகளே ஜனாதிபதி யார்
என்பதை உறுதி செய்யப்போகின்றது. எனவே முஸ்லிம் மக்கள் தமது சக்தி எத்தகையது என்பதை வெளிக்காட்டும் விதத்தில் ஜனாதிபதி வேட்பாளராக முஸ்லிம் ஒருவரை நிறுத்தி அவருக்கு ஒட்டுமொத்தமாக தமது முதலாவது வாக்கை அளிக்கவேண்டும்.
இரண்டாவது வாக்கை முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் செயற்படக்கூடிய பிரதான வேட்பாளருக்கு வழங்கவேண்டும். இத்தகைய நடவடிக்கையே சமகால அரசியல் போக்கில் முஸ்லிம்களுக்கு சிறந்த பெறுபேற்றைத்தரும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
சமகால அரசியல் நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிகமுக்கிய வகிபாகம் பெறுகின்றன. எனவே, முஸ்லிம் மக்கள் தமது ஒட்டுமொத்தமான 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை எவ்வாறு அளிக்கப் போகின்றார்கள் என்பது முக்கியமானது. இந்தப் பொறுப்பை சரிவர உணர்ந்து தமது பங்களிப்பைச் செய்யவேண்டியது அவசியமாகின்றது.
கடந்த காலங்களில் நம்பிக்கை நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகள், உத்தரவாதங்கள், ஒன்றிணைந்த பங்களிப்புகள் அனைத்தும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பாதகங்களையும் ஏமாற்றங்களையுமே ஏற்படுத்தின. சமூகத்துக்கு நன்மையளிக்கும் விடயங்கள் எதுவுமே நடக்கவில்லை. ஒரு அங்குலக்காணியைக் கூட விடுவிக்க முடியாத நிலையும் சாதாரண அரசியல் அதிகாரத்தைப்பெற்றுக் கொள்ளமுடியாத அவலநிலையுமே காணப்பட்டது.
இனியும் அதன் வழிநடப்பதற்கு நாம் முயற்சிக்கக்கூடாது. முஸ்லிம்கள் கோழை கள் அல்லர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் நாம் எமது அரசியல் பாதையை வகுக்கவேண்டும். சமூகத்தின் தலைவிதியை எந்தசமூகமும் நிர்ணயிக்காதவரை அல்லாஹுதஆலா அதைமாற்ற மாட்டான் என்கிறது அல்குர்ஆன். இதற்கான சந்தர்ப்பமாகவே இம்முறை ஜனாதிபதித் தேர்தல் அமைந்துள்ளது. எனவே எமக்கான ஒருவேட்பாளரை நாம் களம் இறக்கவேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதில் களமிறங்குவாரானால் அதுவும் சிறப்பானதே.
எமது அபிலாஷைகள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைச் சரிவர புரிந்து கொண்டு- ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு உறுதியான முறையில் உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கு நாம் ஆதரவளிப்பது முக்கியமானது. எனினும் எமது ஒட்டுமொத்த ஒன்றித்த சக்தி எத்தகையது என்பதை நாம் அவர்களுக்கு காட்டவேண்டியதும் அவசியம்.
எனவே, ஜனாதிபதி வேட்பாளரான முஸ்லிமுக்கு எமது முதலாவது வாக்கை அளிக்கவேண்டும். பின்னர் எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட வேட்பாளருக்கு இரண்டாவது வாக்கை அளிக்கவேண்டும். காரணம் முஸ்லிம் வேட்பாளர் பெற்றுக்கொண்ட அத்தனைவாக்குகளும் மற்றைய வேட்பாளருக்கும் கிடைக்கப்பெற்றதையும் இந்தவாக்குகள் மூலமாகத்தான் அவர் வெற்றி பெற்றார் என்பதையும் உறுதி செய்யவேண்டியதும் அவசியமானது.
இந்த முக்கியத்துவத்தில் எமது வகிபாகம் எத்தனை சக்திமிக்கது என்பதை எடுத்தி யம்பவே முஸ்லிம் தமக்கான ஒரு வேட்பா ளரை நிறுத்தி அவருக்கு தமது ஒட்டுமொத்த வாக்குகளை முதலில் அளித்து தமது சத்தியை வெளிப்படுத்த வேண்டும் என்ப தை வலியுறுத்த விரும்புகிறேன் என்றார்.
So we will vote to Muzammil Weerawansa.
ReplyDeleteTremendous idea
ReplyDeleteஇவ்வாறுதான் கடந்ந்த தேர்தலில் பேரம்பேசும் சக்தியாக மாறி வெளிப்படையாகவே எமது பலத்தால் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார்.
ReplyDeleteஆனால்,முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை என்பது கண்கூடு.
இருப்பினும்,
கடந்த காலத்தின் படிப்பினைகளோடு வரும்காலங்களில் சிறந்த திட்டமிடல்கள் மூலம் சமூகத்தை வழிநடத்துவது வரவேற்கத்தக்கதே....
அல்லாஹ் முடிவு செய்ததை யாரால்தான் மாற்ற முடியும்.
What a fantastic idea
ReplyDeleteThe former CM was one of the SLMC member who all supported the Present President without any agreement after the Postal votes.
His colleagues were in the Parliament and the Cabinet of RW.
All communal violence in their period from Ampara , Digana , Minuwangoda and the post Easter incidents against Muslims were just seen by them as onlookers.
They all acted in a drama of resignation and with the blessings of RW has reverted back.
Having Presidential councils in the party none had the the courage to go to courts against the Monk MP Athuraliya Thero but they were seen in the courts against the infamous case of Constitutional crisis of MR’s Premiership.
Now this gentleman wants to hand over all the Muslim Votes to the so called expected winning candidate and expecting miracles to happen from him because of his and his party’s demanding power.
At least have these people had any pain in their mind towards that lady who was arrested and detained for insulting the religion by dress from Mahiyangana.
Sir
Please stop your sermon and allow us to vote whoever we think a good candidate.
As SLPP says, UNP and other potential candidates also declared that they don't want Muslim's vote with conditions attached, what are we going to do? Under present hostile condition, which leading candidate is going to enter in to an agreement with "Muslims" and face a unfavorable Sinhalese voters?. If we don't cast 2nd preference to any of the first two leading candidates, that vote will have no value in the 2nd round of counting.
ReplyDelete