தாக்குதல் நடக்கலாமென சமூக ஊடங்களில் பரவும் கடிதம் - அச்சப்பட வேண்டாமென்கிறது இராணுவம்
தென் மாகாணத்துக்குள் இராணுவத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், தென் பகுதி மக்கள் அச்சமின்றி இருக்குமாறும் இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்திலுள்ள அரசாங்க நிறுவனமொன்றுக்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கடிதம் தொடர்பில் தெளிவுப்படுத்தல் ஒன்றை வெளியிட்டே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் சகல பிரிவுகளுடனும் நெருங்கியத் தொடர்புகளைக் கொண்டு, தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காக சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment