Header Ads



இந்து ஆலய வளாகத்தில் புத்தர், சிலையை நிறுவிய பிக்குவுக்கு மனநோய்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலய வளாகத்தை அடாத்தாக சுவீகரித்து அங்கு பாரிய புத்தர் சிலையொன்றை நிறுவி - பௌத்த விகாரையை அமைத்து குடிகொண்டிருக்கும் கொலம்ப மேதாலங்க தேரர் தற்போது மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

அவர் தற்போது கொழும்பில் மனநல சிகிச்சை பெற்று வருகின்றார் என்ற விடயமும் அம்பலமாகியுள்ளது.

இதனை இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரியப்படுத்தியுள்ளார்.   

"கடந்த வாரம் முல்லைதீவு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய அறங்காவலர்கள் என்னைச் சந்தித்தார்கள். அங்கே முகாமிட்டிருக்கும் பெளத்த தேரருக்கு எதிராக அறங்காவலர் அளித்துள்ள புகாரை பொலிஸ் விசாரிக்கவில்லை என்று சொன்னார்கள். 

தொலைபேசியில் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் "ஏன், பிக்குவை கண்டு விசாரித்து வாக்குமூலம் எடுக்கவில்லை" எனக் கேட்டேன். 

"இல்லை ஐயா, பிக்குவுக்கு மனநிலை சரியில்லை. இப்போது அவர் கொழும்பில் மனநல சிகிச்சை பெற்று வருகின்றார்" என எனக்குப் பொறுப்பதிகாரி பதில் சொன்னார்" என்றார். 

4 comments:

  1. Good Punishment from god to Human being /Monk.. After all he is just a Monk/Dirty Human. GOD should Punish all the Crazy Terror MONKS very soon..

    ReplyDelete
  2. Ajan எங்கே துண்டக் காணோம் துனியக் கானோம் என ஓடிவிட்டீர் போலும்.இந்த பிக்குதான் சரியான ஆள் வட மாகாண ஆழுனர் பதவிக்கு.Ajan முன்பு சொன்னார் ஜனாதிபதிக்கு சரியான ஆள் ரத்ன தேரர் என,ஆனால் மஹிந்தவே சொல்லிவிட்டார் ரத்ன தேரரை முட்டாள் என.ஆனால் முல்லைத்தீவு கொலம்ப மேதாலங்க தேரர் மிகப் பொருத்தமான ஆள் வட மாகாண ஆழுனர் பதவிக்கு.

    ReplyDelete
  3. இதை வச்சு நான் இதனை எழுதவில்லை. இறைவனின் சாபம் மற்றவர்களின் உள்ளத்துடன் அகோரமாக புகுந்து விளையாடுபவர்களுக்கும் அடாத்தாக விளையாட நினைப்பவர்களுக்கும் இதற்காகக் கூட்டம் சேர்ப்பவரகளுக்கும் வந்தே தீரும். இதனை சகல மதங்களும் மிகத் தெளிவாக புடம் போட்டுக் கூறுகின்றன.

    ReplyDelete
  4. pirapalangal kaithu seyyappatta marukaname vaiththiyasaalaikkuch chelvathu poantruthaan???

    ReplyDelete

Powered by Blogger.