இன்று அரசாங்கத்துக்கு எதிரான, நம்பிக்கையில்லா பிரேரணை - நாளை வாக்கெடுப்பு
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று -10- நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதன்படி இன்று (10) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சி செயற்படுமென்று அக்ட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment