நாட்டுக்கும், UNP க்கும் புதிய தலைவர்கள் தேவை
ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் தேவை என்று, அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
பண்டாரகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
புதிய துடிப்பு மிக்க ஒரு தலைமையே இன்றை நாட்டின் தேவையாகவுள்ளது.
நாட்டில் தற்போது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையே காணப்படுகின்றது.
19 ஆவது திருத்தச் சட்டத்திலும் இது குறித்து திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டிற்கு புதிய, துடிப்புடன் செயற்படக்கூடிய ஒரு தலைவரே தேவைப்படுகின்றார்.
அதுவே இன்று நாட்டின் தேவையாகவும் உள்ளது.
டிசம்பர் வரை காத்திருக்காது வெகுவிரைவில் ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவொன்று எட்டப்படவேண்டும்.
நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் மட்டும் இன்றி, கட்சிக்கும் புதிய தலைவர் ஒருவர் தேவை என்றும் அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
Post a Comment