முஸ்லிம்களை வேட்டையாடத் துடிக்கும், பேரினவாதிகளுக்கு கடிவாளம் தேவை - வேலுகுமார் Mp
முஸ்லிம் சமூகத்தை கூண்டோடு வேட்டையாடத் துடிக்கும் பேரினவாத சக்திகளுக்கு அரசாங்கம் உடனடியாக கடிவாளம் போட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்நாடு மீண்டும் அதலபாதாளத்தை நோக்கியே பயணிக்கும் நிலை உருவாகும். சில சம்பவங்களைப் பார்க்கும்போது நாட்டை ஆள்வது அரசியல்வாதிகளா அல்லது பேரினவாதிகளா என்ற சந்தேகம் எழுகின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக பதவி விலகியமை தொடர்பில் வேலுகுமார் எம்.பி.யால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
நாட்டின் நலனையும், சமூகத்தின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளால் எடுக்கப்பட்டுள்ள முடிவை இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர்.
இப்பிரச்சினையை பெரிதுபடுத்தி முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் அரசியல் கண்காட்சிகளை நடத்தியிருக்க முடியும். அவ்வாறு செய்திருந்தால் இந்நாட்டில் இரத்த ஆறு ஓடியிருக்கும். எனவே முஸ்லிம் அரசியல்வாதிகளின் இந்த விட்டுக்கொடுப்பை எவரும் பலவீனமாக கருதக்கூடாது.
நாட்டில் தற்போது நடைபெறும் சில சம்பவங்களைப் பார்க்கும்போது நாட்டை ஆள்வது அரசியல்வாதிகளா அல்லது பேரினவாதிகளா என்ற சந்தேகம் எழுகின்றது. அதுமட்டுமல்ல நாட்டுக்கென அரசமைப்பு மற்றும் சட்டம் இருக்கையில், எதற்காக அழுத்தங்களுக்கு பணியும் வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன?
முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் அடிப்படைவாதிகள் இருக்கலாம். அவ்வாறானவர்களை அடையாளம்கண்டு தனியாக களையெடுக்க முடியும். மாறாக ஒரு சிலருக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் வதைக்க முயன்றால் அது பாதகமான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.
அதேவேளை, முஸ்லிம்களைத்தானே சீண்டுகின்றனர். நமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையே என சிறுபான்மை இனத்திலுள்ள சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
அது தவறாகும்.இன்று முஸ்லிம் சமூகத்தின் கழுத்தில் வைக்கப்பட்டுள்ள பேரினவாதம் என்ற கத்தி நாளை தமிழர்களின் கழுத்திலும் வைக்கப்படலாம். எனவே, பேரினவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்து, தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக சிறுபான்மையின மக்கள் ஓரணியில் திரள வேண்டும்.
அதேபோல், பேரினவாதிகளை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். அவர்கள் மீது கைவைத்தால் நாட்டில் பிரச்சினை தலைதூக்கும் என நினைத்து அரசாங்கம் மௌனம் காக்குமானால், நாட்டுக்கு வளமானதொரு எதிர்காலம் இல்லை என்றே கூறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த கருத்து
ReplyDeleteநடு நிலையான கருத்துக்களை அண்மைக் காலமாக பேசும் ஒரு சிறந்த அரசியல் வாதி
ReplyDeleteWell said dear Velukumar.
ReplyDeleteArumayana pathivu
ReplyDelete