Header Ads



இலங்கை, இந்தியாவுக்கு ISIS பயங்கரவாத அச்சுறுத்தல் - இந்திய உளவுத்துறை

-Adaderana-

இலங்கை, இந்தியாவுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அச்சுறுத்தல் - இந்திய உளவுத்துறை 
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய மத்திய உளவுத்துறை குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தமது தளங்களை அங்கு இழந்துள்ளமையினால் இலங்கை மற்றும் இந்தியா இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறை கூறியுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் வௌியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, 

கோவையில் உள்ள மூன்று இளைஞர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளாக மாறி இருக்கிறார்கள் என்றும் அவர்களால் தென் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அந்த மூன்று பயங்கரவாதிகளும் “அபு அல் கிடல்” எனும் பயங்கரவாத அமைப்பை நடத்தி வருகிறார்கள். அவர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

இலங்கையில் சமீபத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உதவியுடன் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் சுமார் 250 பேர் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலுக்கு தலைவனாக செயல்பட்ட ஸஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்தியாவில் அண்மையில் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டில் நாசவேலை செய்ய திட்டமிட்டிருந்த தகவல் தெரிய வந்ததாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

சந்தேகப்படும் நபர்கள் பட்டியலில் உள்ளவர்களை அதிக அளவில் நெருங்கி கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அந்த இளைஞர்களின் நகர்வுகளை வைத்து உடனுக்குடன் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. காந்தான்குடி கல்முனை ஆகிவற்றை சுற்றிவளைத்தால் ஆயிரக்கன்கான ISIS ஆட்கள் பிடிபடுவார்கள்

    ReplyDelete
  2. இவனுக செத்த காவோதி பண்டிகள் இலங்கையில் இவானுக காமடி பீசு கோழைகள் தூ

    ReplyDelete
  3. India is a terrorist agent.india is the response on that21st attacked.india spoiled our economy.india moody his agent of yahoodi.

    ReplyDelete
  4. Ajan unn ammada paavadaikka isis irukkan poi thedi Paar. Appadi illa enda army kaaren da condom packet irukkum nalla paaru

    ReplyDelete

Powered by Blogger.