Header Ads



தாஜ் சமுத்ரா ஹோட்டல் தாக்கப்படாதது ஏன்..? பயங்கரவாத தாக்குதலுடன் வெளிநாட்டு சக்தி தொடர்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் ஏதாவது வௌிநாட்டு சக்தி ஒன்று தொடர்புபட்டிருப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். 

நேற்று இரவு டி.வி. தெரணவில் ஔிபரப்பான 360 அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த தயாசிறி ஜயசேகர இதனைக் கூறியுள்ளார். 

அந்த தாக்குதல் இடம்பெற்ற போது தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஒரு குழு இருந்ததாகவும், அந்தக் குழு அங்கு இருந்த காரணத்தினாலே அங்கு தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

எதிர்காலத்தில் இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்தது யார் என்பது தௌிவாகும் என்றும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

1 comment:

  1. நீங்கள் கூறுவதை இருந்து பார்ப்போம் பொலிஸ் விசாரனைகிலின் பின்பு தெரிய வரும்.ஆனால் குளியாப்பிட்டி ,புத்தளம் Muslim மக்களின் ஏன் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.பொலிசார் கைது செய்தவர்கலை ஏன் நீங்கள் தலயிட்டு விடுவித்தீர்கல்

    ReplyDelete

Powered by Blogger.