Header Ads



கல்லொழுவயில் முஸ்லிம் தாய்கு நடந்த கொடூரம் - பௌத்த குண்டர்கள் நடுவீதியில் புரிந்த படுபாதகம்


 (24. 6. 2019) காலை மினு/கல்லொழுவை   என்ற முஸ்லிம் கிராமத்தில் நடந்த மிகவும் வேதனைக்குரிய,  அதே நேரம் வன்மையாக கண்டிக்கக்கூடிய இனவாதத்திலும் ஒரு கீழ்த்தரமான இனவாதச் செயல் நடந்துள்ளமையை மன வருத்தத்தோடு எமது சமூகத்துக்கு தெரிவிக்கிறேன். 

      கொழும்பு அப்பல்வத்தையை சேர்ந்த ஒரு தாய் கல்லொழுவையில் வசிக்கும் தனது மகள் வீட்டிலிருந்து காலை கொழும்புக்கு செல்வதற்காக நடந்து சென்றுகொண்டிரந்த வேளை மினுங்கொடை பிரதான வீதியிலிருந்து வந்த ஒரு ஆட்டோ தன்னருகிலே மிகவும் மெதுவாக நெறுங்கி முன்னே சென்று மீண்டும் பின்னோக்கி வந்த ஆட்டோவில் இருந்து இரு சிங்கள காடையர்கள் அந்தத் தாயுடைய  முந்தாணையை இழுத்தப்பறித்து அந்த தாயின் கழுத்தி்ல் கட்டிவிட்டு கீழே தரையோடு போட்டு அப்படியே ஆட்டோவை ஓட்டிக் காெண்டு சற்று தூரம் வரை அந்தத் தாய் கதறியபடி உடல் தரையிலே உரசியபடி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். 

அத்தோடு அநத தாய் முந்தாணையை இழுத்தெறிந்து எழுந்து நின்று சத்தமிட்டு கத்தவே, அந்த காடையர் இவரை விட்டு வேகமாக சென்றுள்ளனர். 

    அப்போது அவ்விடத்துக்கு வந்த இன்னுமோர் ஆட்டோ அவரருகே நிறுத்தி என்ன நடந்து என்று வினவ தாய் நடந்ததை சொல்லி அழ அவர்கள் இநத தாயை தனது மகள் வீட்டில் சேர்த்துள்ளனர். 

    ஊரில் சில பெண்கள் இந்த தாய்க்கு நடந்த அநியாயத்தை தட்டிக் கேட்க வேண்டுமன ஊரிலுள்ள ஐ. தே. க மந்திரி மொஹமட் Gகப்பார் இடம் செல்ல அவர் சமாதானப்படுத்தி அனுப்ப. இவர்கள் மினு பொலிஸ் நிலையம் சன்றுள்ளனர். அங்கே அவர்கள் வைத்தியசிலையில் அனுமதிக்கும்படி சொல்லி அனுப்பியுள்ளனர். 

   இப்போ அந்த தாய்க்கு சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் அளவு உயர்ந்தும் உடல் , தலை எங்கும் உரசிப்பட்ட காயங்களாடும் வைத்தியசிலையில் இருக்கின்றார்.


2 comments:

  1. மிருகத்திலும் கீழ்த்தரமான இனம்போல. ஈனப்பிறவிகள், வேசியின் கருவிலிருந்து வெளியேறிய அசுத்தங்கள் தான் அந்த காடையர்கள்.

    ReplyDelete
  2. நாங்கள் துஆ செய்கின்றோம் உம்மா. ரொம்ப கவலைதான்.

    ReplyDelete

Powered by Blogger.