Header Ads



முஸ்லிம் ஆளுநர்களை பார்த்தபோது எனக்கு வாந்தி வந்தது, 8 ஆம் வகுப்பில் சித்தி பெறாதவரே றிசாத்

மன்னாரில் இருந்து பொலித்தீன் பையில் சட்டையையும், காற் சட்டையையும் போட்டு கொண்டு கொழும்புக்கு வந்த றிசார்ட் பதியூதீன் என்பவர் தற்போது இலங்கையில் உள்ள முன்னணி செல்வந்தர் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் அத்துரலியே ரதன தேரர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இடத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

32 பேர் சிரியாவுக்கு சென்று பயிற்சி பெற்று திரும்பியுள்ளதாகவும் எந்த சந்தர்ப்பத்திலாவது குண்டுகளை வெடிக்க செய்யலாம் எனவும் நான் நாடாளுமன்றததில் கூறினேன்.

அன்றில் இருந்து சிங்களவர்களை அவமதிக்கும் மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன போன்றவர்கள் தொடர்ந்தும் ஊடக சந்திப்புகளை நடத்தி, இலங்கையில் அப்படி எதுவும் எப்போதும் நடக்காது எனக் கூறி வந்தனர்.

எந்த முஸ்லிமும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இல்லை. எவரும் சிரியாவுக்கு செல்லவில்லை. அதனை பொறுப்புடன் கூறுவதாக தெரிவித்தனர்.

நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் இந்த நிலைப்பாட்டிலேயே இருந்தனர். எமது நாட்டு முஸ்லிம் இளைஞர்களை தவறாக வழிநடத்திய போது, அவர்களுக்காக குரல் கொடுத்தனர்.

இறுதியாக நாட்டின் ஜனாதிபதி ஆளுநர்கள் பட்டியலை வெளியிட்டார். அதனை பார்த்தபோது எனக்கு வாந்தி வந்தது.

இவர்களில் சிலர் ஆளுநர் பதவியல்ல, ஆளுநர் அலுவலகத்தில் இருக்கும் கழிவறையை கூட சுத்தம் செய்ய தகுதியற்றவர்கள்.

அத்துடன் நாட்டில உள்ள அமைச்சுக்களில் அதிகளவான நிறுவனங்கள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கே வழங்கப்பட்டுள்ளன. 47 அரச நிறுவனங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத, மன்னாரில் இருந்து பொலிதீன் பையில் சட்டையையும், காற்சட்டையையும் போட்டு கொண்டு கொழும்புக்கு வந்த றிசார்ட் பதியூதீன் என்பவர், தற்போது இலங்கையில் உள்ள முன்னணி செல்வந்தர்.

ஹரி ஜயவர்தன, தம்மிக்க பெரேராவிட அதிகளவான சொத்துக்கள் இருக்கின்றன. அவை யாருக்கும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

12 comments:

  1. பிழையான தகவல் ரிஸாட் ஒரு பொரியியலாளர்.

    ReplyDelete
  2. Rishad was a civil engineer..
    Passed out from Moratuwa university

    ReplyDelete
  3. ரிசாத் அமைச்சர் பொறியியலாளர் என்கின்றனர் இவர் 8ம் வகுப்பு என்கின்றார். இவர் சொல்லும் அனைத்தும் பொய்யாக இருக்குமோ?

    ReplyDelete
  4. Post your cv here let us (piblic) to review

    ReplyDelete
  5. இனவாதி இவனுக்கு எதிராக தனது கல்வித் தரத்தை இழிவு படுத்தியமைக்காக
    அமைச்சர் றிஷாட் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  6. Wijedasa Rajapakse is known racist among Buddhists. If you had evidence to prove that Muslim youths went to Syria then why didn't you give it to intelligence team to take action. You are politically bankrupt and your own community has ignored you long time ago. Holding a doctorate does not mean you are good human being.

    ReplyDelete
  7. Intha maathiri thuwesakkunam padaccha jirimihal ullawaray siru paanmay makkalukku manadakkuthuthaan......
    ....

    ReplyDelete
  8. IF WR appear infront of a mirror he will womit blood, because his ugly communal face...

    ReplyDelete
  9. Vaanthi vanthathaamaa.. Appa iwar enna padichu irukaaraam, ippadi pithu pudicha poutha kurumaroda sernthu, ippadi keel tharamaana adavadi panni thirium naihal ellam, rizadh a pathi pesithuhal..putha matham endalea poi um adavadi thanamum maddum thaanaa.. Enna polappuda Unga polappu

    ReplyDelete
  10. Aren't there any limit for the pack of lies these politicians vomit?

    ReplyDelete
  11. should file the case against this racist for disrespect regarding Rishad educational qualification.

    ReplyDelete

Powered by Blogger.