Header Ads



3 முஸ்லிம்கள் மீது, தலதா மாளிகைக்கு அருகில் தாக்குதல் - பொலிசாரிடமும் ஒப்படைப்பு

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரருக்கு ஆதரவாக கண்டியில் இடம்பெற்றுவரும் மாபெரும் போராட்டத்தில் முஸ்லிம் நபர்கள் மூவரால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் அமைச்சர்களை பதவி விலகக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக இன்றைய தினம் கண்டி நகரில் பாரிய போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட குறித்த போராட்டத்தில் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த முடியாத மூன்று முஸ்லிம் நபர்கள் கலந்து கொண்டதன் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த மூவரையும் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை அங்குள்ளவர்கள் கேட்டப்போது அவர்கள் மூவரும் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த தவறியுள்ளனர்.

இதன்காரணமாக அங்கு இருந்தவர்கள் குறித்த மூவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் அங்கு கடமையில் இருந்து பொலிஸார் அவர்களை பொதுமக்களிடம் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

எனினும் பொலிஸாரிடமும் தமது அடையாளத்தை அவர்கள் உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் குறித்த மூவுரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

3 comments:

  1. நாய் ஓத்த jafna Muslim அவன்ட இவன்ட news copy பன்னாம சொந்தமா news போடு
    பகல் 12 மணிக்கு பிறகுதான் news போற அதுலையிம் அனைத்தும்
    வேறவன்டய copy தூ ..... நாய்ர ஊடகம்

    ReplyDelete
  2. Very good this jaffna muslim some time recist

    ReplyDelete

Powered by Blogger.