Header Ads



தவ்ஹித் அமைப்பில் பல தற்கொலையாளிகள் உள்ளனர், IS ஐ அழிக்கவுள்ளதாக ஞானசார சூளுரை

இலங்கையில் செயற்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தேரர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்சின் இலங்கைக்கான கிளையாக தவ்ஹித் ஜமாத் அமைப்பு செயற்பட்டு வருகிறது.

தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த மேலும் பல தற்கொலை குண்டுதாரிகள் உள்ளதாகவும் அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கவுள்ளதாக ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.

ஐ.எஸ் அமைப்பை இலங்கையில் முற்றாக அழிக்கவுள்ளதாக தேரர் சூளுரைத்துள்ளார்.

இலங்கையிலுள்ள ஐ,எஸ் பயங்கரவாதிகள் தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளதுடன், அது தொடர்பில் ஐ.நா சபைக்கும் மனு ஒன்றும் அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஆறு மாதங்களாக ஞானசார தேரர் சிறையில் இருந்தார். எனினும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.