Header Ads



மட்டக்களப்பில் சவுதி நாட்டு குழுவினர் - பல்வேறு வைபவங்களிலும் பங்கேற்பு



சவுதி நாட்டு பிரதிநிதிகள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பில் இன்று மட்டக்களப்புக்கு விசேட விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டனர்.

சிறீலங்கா ஹிறா பௌன்டேசனின் ஏற்பாட்டில் இதுவரை குடிநீரினை பெறாத 100 வறிய குடும்பங்களுக்கு நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையின் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் வகையில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் வைபவம் ஆளுநரின் காத்தான்குடி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.ஹிறா பௌன்டேசனின் தலைவர்,கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில்
சவுதி நாட்டின் மன்னர் மதிப்பிற்குரிய சல்மானின் ஆலோசகர் ஹாலித் இப்னு நாஸிர் அஸ் ஸித்ரி தலைமையிலான குழுவினர் வருகை தந்து இவ் உதவிக்காசோலைகளை வழங்கிவைத்தனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இன்று மட்டக்களப்புக்கு வருகை தந்த சவுதி நாட்டுக்குழுவினர் காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கும் வருகைதந்து பார்வையிட்டனர்.


1 comment:

  1. Excellent work & service to humanity. Saudi money means more Baraka (blessings).

    ReplyDelete

Powered by Blogger.