Header Ads



டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட, மதுஷின் சகாக்கள் 2 பேர் கைது

டுபாயில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருமான மாகந்துரே மதுஷின் மேலுமிரு சகாக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மொஹமட் நையீம், மொஹமட் முபா ஆகிய இருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். டுபாயிலிருந்து இன்றுக்காலை 5,04க்கு வந்த யு.எல்.-226 என்ற வி​மானத்திலேயே இவ்விருவரும் வருகைதந்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.