Header Ads



மைத்திரி தரப்புடன் இணைந்ததால், எங்களைப்பற்றி மக்களிடமிருந்த ஆர்வம் வீழ்ச்சியடைந்துள்ளது

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவன பிரதானிகளுடன் இன்று நடத்திய சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்காக மைத்திரி தரப்புடன் இணைந்து கொண்டோம்.

எனினும் அதற்கு முன்னர் மக்களின் மத்தியில் எமது தரப்பு தொடர்பில் காணப்பட்ட ஆர்வம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்களின் ஆர்வத்தை மீளவும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒக்ரோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசப்படவில்லை.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இரண்டும் பைத்தியங்கள் தான்.

    ReplyDelete

Powered by Blogger.