Header Ads



யார் துள்ளி குதித்தாலும் ஜனாதிபதி தேர்தலில், வெற்றி பெறக்கூடிய வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறுவோம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு இன்றியும் ஐக்கிய தேசியக் கட்சியினால், வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கந்தான, நாகொட பிரதேசத்தில் நடைபெற்ற வைபவத்தின் பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

எத்தனை முறை தோற்கடிக்க முயற்சித்தனர். 52 நாட்களில் அரசாங்கத்தை தோற்கடித்த முயற்சித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் வென்றோம். அவர்கள் வாக்குகளை பயன்படுத்தினால், வெற்றி பெறுவதற்கான துரும்புச் சீட்டுக்கள் எங்களிடம் இருக்கின்றன.

அதேவேளை கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக இருக்காதா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹரின்,

ஜனாதிபதி தேர்தலில் உரிய நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தகுதியான வேட்பாளரை நிறுத்தும். யார் துள்ளி குதித்து கொண்டிருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறக்கூடிய வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறும்.

ஒரே குடும்பம் தொடர்ந்தும் ஆட்சிக்கு வருவதை மக்கள் மட்டுமல்ல இளம் தலைமுறையினரும் விரும்ப மாட்டார்கள்.

புதிய வேலைத்திட்டத்துடன் தேர்தலை சந்தித்தால், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. நாங்கள் என்ன செய்திருக்கின்றோம், என்ன செய்யவில்லை என்பதை தேர்தல் வரும் போது காட்டுவோம்.

நாட்டின் பொருளாதாரத்தை யார் வீழ்ச்சியடைய செய்தனர் என்ற அனுபவம் மக்களுக்கு உள்ளது. வேறு நபர்கள் வாங்கிய கடனை நாங்கள் செலுத்தி வருகின்றோம்.

எனினும் நாடு என்ற வகையில் சர்வதேசத்திற்கு மத்தியில் தலைகுனியாமல் மெதுவாக முன்னோக்கி நகர்ந்து வருகின்றோம். புதிய தலைமையுடன் பெரிய இடத்திற்கு செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. யார் அரசாங்கம் அமைத்தாலும் எமது Muslim சமூகதுக்கு எந்த பலனும் இல்லை.but,UNP ஆட்சியில் பாசிச புலிகளும்,டயஸ் போராக்கலும் மீண்டும் தலை தூக்கிவது மட்டுமல்லாமல் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மிக பெரும் திட்டங்கலுடன் காத்துக்கொண்டிருக்கின்ரனர்

    ReplyDelete
  2. Not only unp slfp mahinda group yahoodi nasarani india entire eneimes waiting for us.insha allah be unity among us no body cant defeat us.

    ReplyDelete

Powered by Blogger.