Header Ads



இம்ரான்கான் உதிர்த்துள்ள, அற்புதமான வார்த்தைகள்


புல்வாமா தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவந்துள்ள நிலையில் இன்று நடந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாம் ஓர் பொறுப்பான பிரதமர் என்பதை நிரூபிக்கும் வகையில் பேசியுள்ளார்.

புல்வாமா பாதிப்புக்குள்ளானவர்களின் குடும்பங்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்பது நமக்கு தெரியும்.

பல தசாப்தங்களாக நாங்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களாகவே இருந்தோம். ஏன் நான்கூட ஒரு குண்டுத் தாக்குதல்களிலிருந்து தப்பிப் பிழைத்து மருத்துவமனைகளுக்கு வந்துள்ளேன். போர் என்றால் என்ன என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆரம்பத்திலிருந்தே புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் கேட்டு வருகிறோம். இந்தியா தகுந்த ஆதாரம் தந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். வரலாற்றில் ஏற்பட்ட போர்கள் அனைத்தும் தவறான அனுமானங்களால் உருவானவை. போரைத் தொடங்குபவர்களுக்குத் தெரியாது அது எப்போது முடியும் என்று. தவறான கணிப்பால்தான் போர்கள் நடக்கின்றன.

தவறாகக் கணித்தால், நாம் போரில் ஈடுபடும் சூழல் ஏற்படும். போர் நடந்துவிட்டால் அது என்னுடைய கட்டுப்பாட்டிலோ மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது. அதனால் இந்த விவகாரத்தில் சரியான புரிதல் வேண்டும்.

பாகிஸ்தான் - இந்தியா இடையே நல்லுணர்வு நிலவ வேண்டும். புல்வாமா தீவிரவாத தாக்குதல் உட்பட மற்ற அனைத்துப் பிரச்னைகளையும் பேசித் தீர்க்க இந்தியாவை நான் அழைக்கிறேன்.

அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும். பேச்சு வார்த்தைதான் சரியான தீர்வாக இருக்கும். போரால் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படாது.

இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்காக நாங்கள் பதில் தாக்குதலில் ஈடுபடவில்லை. ஏனெனில் விமானப் படை தாக்குதலால் எங்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஏற்பட்டதாக நாங்கள் எண்ணவும் இல்லை. எங்களுக்கு அதிகமான பாதிப்புகள் இல்லாதபோது, இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை.

எங்களால் திருப்பி தாக்க முடியும் என்பதை நிரூபிக்க மட்டுமே இன்று தாக்குதல் நடத்தினோம். எங்கள் எல்லைக்குள் நீங்கள் அத்துமீறினால் நாங்களும் அத்துமீறுவோம் என்பதைக் காட்டத்தான் தாக்குதல் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைதான் சரியான தீர்வாக இருக்கும். போரால் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படாது என கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்..

8 comments:

  1. இம்ரான் கான் தன்னையொரு சிறந்த கல்வியாளன், மோடி தன்னையொரு முட்டாள் இனவெறியன் எண்டும் காட்டிவிட்டனர்

    ReplyDelete
  2. Alhamthulillah Allah u.ku rahmath seivanaha

    ReplyDelete
  3. This is how a Muslim leader think... for the safety of people while replying to the arrogance, racist mind politicians and army which conducts oppression toward Kashmeer Muslims by killing, raping and harming the public.

    Well said Brother Imran... They may harm and act violently..but we Muslims follow the footsteps of Muhammed (sal).. We love peace..

    BUT If they enter our houses, boarders then do not keep silent.. reply them in return in a shocking manner.

    We Love Peace,,, Do not cross red line.. We will fight till we reach paradise for the sake of peace and safety of our people and your people too.

    ReplyDelete
  4. He is an Oxford Educated Politician with degree in Philosophy, Politics and Economics.

    ReplyDelete
  5. Bravo. Be very Brave With this Mr. Tea Man Criminal Modhi of India.
    Educated World is with you Mr. Imran Khan.

    ReplyDelete

Powered by Blogger.