Header Ads



ரணில் முன் ஹரின் ஆவேசம் - ரஞ்சன் இருந்திருந்தால், அவனது மூக்கில் குத்துவேன்

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் மூக்கில் குத்துவேன் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், பிரதமரே, ரஞ்சன் ராமநாயக்க இன்று இங்கு இருந்திருந்தால் அவனது மூக்கில் இரண்டு குத்து விடுவேன் என தெரிவித்துள்ளார்.

கொக்கேய்ன் போதைப் பொருள் பயன்படுத்தும் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன, சுகாதாரம், மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதாஅதுகோரள, சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா மற்றும் சிட்னி ஜயரட்ன உள்ளிட்ட பலரும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இந்த ஆளும்கட்சிக் கூட்டத்தில் ரஞ்சன் ராமநாயக்க பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.