Header Ads



ரணிலுக்கு பிரதமர் பதவி, வழங்கப்படவில்லை என்றால் மைத்திரிபால விரட்டியடிக்கப்படுவார்

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவில்லை என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரட்டியடிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஹரின் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முதல் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவில்லை என்றால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரட்டியடிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் நாட்டின் சம்பிரதாயங்களுக்காகவே காலை, மாலை என போராடுகின்றோம். நாட்டிற்கு என்று சம்பிரதாயங்கள் உள்ளன.

பதவி ஆசைக்காக நாங்கள் போராடவில்லை. நாட்டை பாதுகாக்க ஒருவரை கொண்டு வந்தால் அவரை ஏமாற்றுவது மிகவும் தவறு. எங்கள் பாரிய மக்கள் ஆதரவு கிடைத்தது.

நீதிக்காக கட்சி பேதம் பார்க்காமல் அனைவரும் வீதிக்கு இறங்குவோம் என நான் அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.