Header Ads



கிழக்கில் முஸ்லிம் சமூகம், துரித அபிவிருத்தியை அடைந்துள்ளது - பொறாமைப்படும் வியாழேந்திரன்

 தனது கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாவிட்டால் தற்போதுள்ள அரசாங்கத்தை எதிர்க்கத் தயாராக இருப்பதாக கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

கிழக்கில் இதுவரை எந்தவித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை எனவும் மூன்றரை வருடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியிடமே நிதி அமைச்சு காணப்பட்டபோதும் அக்கட்சி எவ்வித அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை எனவும் வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

கிழக்கில் முஸ்லிம் சமூகம் துரித அபிவிருத்தியை அடைந்துள்ளது. பிள்ளையான் காலத்தில் துரித அபிவிருத்தி நடந்தது. இப்போது பிள்ளைகளுக்கு மலசலகூடங்கள் கூட இல்லை. 50,000 வீடுகள் கட்டப்படவில்லை. அரசியலிலிருந்து 50,000 பேருக்கு கெட்டது செய்வதை விட ஐவருக்கு நல்லது செய்வது நல்லது

என வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் நடுநிலை வகித்தால் தானும் நடுநிலை வகிப்பதாகவும் அவர்கள் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தால் தாம் மஹிந்த ராஜபக்ஸ தரப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அரசியல் கைதிகளின் விடுதலை, காணி மற்றும் இனப்பிரச்சினை, பெண் வாழ்வாதாரத் திட்டங்கள், விசேட தேவையுடையோருக்கான திட்டங்கள், மீன்பிடி மற்றும் விவசாய அபிவிருத்தி, வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை தாம் முன்வைத்துள்ளதாகவும் வியாழேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மன அழுத்தத்துடன் செயற்படுவதாகவும் தனது கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாவிட்டால் இந்த அரசாங்கத்தையும் எதிர்க்கத் தயாரெனவும் அவர் மேலும் கூறினார்.

5 comments:

  1. வியாழேந்திரா அதல்லாம் அரேபிய இஸ்லாமியர்கள் தங்கள் சகோதரர்களான தமிழ் முஸ்லிம்களுகு ஹிஸ்புல்லாவைத்துல்ல கஹிரா பவுண்டேசன் மூலம் வந்த உதவிகள் அதை பார்து நீ கவலை படாதே பொறாமையும் கொள்ளாதே! ஏன் இப்படி அதிமான இஸ்லாமியர்கள் தங்களின் சொந்த பணங்களால் ஏனையவர்களுக்கு உதவுகின்றார்கள் என்று இஸ்லாமிய மார்கத்தை கொஞ்சம்படி விடைகிடைக்கும்

    ReplyDelete
  2. வியாழேந்திரன் சொல்லுவதும் உண்மை தான்

    ReplyDelete
  3. நீங்களும், உங்களது கட்சியும், கட்சியை ஹைஜாக் பண்ணியுள்ள
    திரு ஆபிரஹாம் சுத்துமாத்தும் வெறும் கதைகள் கதைத்து காலத்தை ஓட்டியும், மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றும் வந்தால் அபிவிருத்தி என்ன வானத்தில் இருந்தா வரப் போகின்றது?

    முஸ்லிம்களை பார்த்து பொறாமைப் படாமல், சுத்துமாத்து போன்றவர்களை அடித்துத் துரத்திவிட்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க முன்வாருங்கள். முஸ்லிம்கள் முன்னேறி இருக்கின்றார்கள் என்றால், அதற்குக் கரணம் அஷ்ரப் இட்ட அத்திவாரமும், அந்த மக்களின் கடின உழைப்புமே தவிர, உங்களை மாதிரி வெறும் கதை கதைத்து வெறுப்பை ஊட்டி காலத்தை ஓட்டி, ஆளை ஆள் ஏமாற்றியது அல்ல.

    ReplyDelete
  4. சுமந்திரன் என்னும் ரணிலின் கைக்கூலியை அடித்து விரட்டிவிட்டு, தமிழ் மக்களை உருப்படியாக முன்னேற்ற வழியைப் பாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.