41 இடங்களில் துஷ்பிரயோகம், செய்யப்பட்டுள்ள மைத்திரிபால - பாராளுமன்றத்தில் தெரிவிப்பு
"ஜனாதிபதி தந்தை" 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று -23- வெள்ளிக்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் உரையாற்றிக்கொண்டிருந்த போது, அருகில் அமர்ந்திருந்த துஷார இந்துனில் எம்.பி ஆபாச புத்தகம் ஒன்றினை வாசித்துக்கொண்டுள்ளார் என கூறினார்.
இதன்போது எழுந்து பதில் கூறிய துஷார எம்.பி:- நான் ஆபாச புத்தகம் வாசிக்கவில்லை, சதுரிகா சிறிசேன எழுதிய "ஜனாதிபதி தந்தை " என்ற புத்தகத்தையே வாசித்துக்கொண்டுள்ளேன். எனினும் இதில் சதுரிகா சிறிசேன ஜனாதிபதியின் பெயரை 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதனை தான் நான் வாசித்துக்கொண்டிருந்தேன். இதனையே முஜிபூர் எம்.பி ஆபாசப் புத்தகம் படிப்பதாக கூறுகின்றார் எனக் குறிப்பிட்டார்.
Post a Comment